ஜல்லிக்கட்டு தமிழன் பிறப்புரிமை

ஜல்லிக்கட்டு தவறென்று
மல்லுக்கட்டும் மூடர்களே !

வாடிய பயிரைக்
கண்ட போதெல்லாம்
வாடியவன் வழி வந்தவர்
நாங்கள் ; வளர்த்த
பிள்ளைகளுக்கா
தீங்கு செய்வோம் !

அறவழியில் போராடுவதால்
அறிவிலிகள் என
நினக்க வேண்டாம் எம்மை !

பீரங்கியின் குண்டும்
துளைக்காத கோட்டை
எழுப்பியவன் வழித் தோன்றல் நாங்கள் !

புல்லுக்கட்டு தூக்க
வலுவில்லாதவனெல்லாம்
இன்று ஜல்லிக்கட்டை
எதிர்க்க வந்து விட்டான் !

புலியை அடக்கியவனின்
வீரப்பரம்பரையின்
கடைசி சொட்டு ரத்தம்
காயும் வரை ஈடேராது
உங்கள் எண்ணம் !

உயிர்வதை கண்டு
பொங்கி எழுவோரே !

தினமும் உணவுக்காக
ஆடும் , மாடும் ,கோழியும்
வெட்டுமிடம் சென்று
அவற்றிற்கு பதில்
உங்கள் கழுத்தை
நீட்டலாமே !

பீட்டா எனும் பேத்தலே
எங்கே நீ பிறந்த நாட்டில்
அனைவரும் அசைவம்
அண்டாதவரோ !

உங்கள் ஊரிலிருந்து தானடா
வந்தது கே எப் சி யும் , மெக்ரனட்டும் ?

உங்கள் வஞ்சத்தில்
மயங்கி வியாபார
யுத்தியில் வீழ்ந்து
நீ போடும் பிச்சைக்காசுக்கு
வாலாட்டும்
எச்சை நாய்களல்ல நாங்கள் !

தூக்கத்தில் கூட
சுரண்டிப் பார்க்க
எண்ணாதே
எங்கள் சுய மரியாதையை !

உனக்கே மறந்து போய்விடும்
நீ வாழ்ந்த இடமும்,
வந்த தடமும் !

வெள்ளைகார விட்டில்களே !
எங்கள் கோபக்கனலில்
கருகும் முன் பறந்து விடுங்கள் உங்கள்
பாதாள தேசத்திற்கு !

இல்லையேல் உங்கள்
மூச்சுக் காற்று கூட மிஞ்சாது
உங்கள் உடலில் உயிர் தங்காது ! கால விரையம்
செய்யாது விரைவாய்
வெளியேறுங்கள்
வீணர்களே !

எழுதியவர் : நெட்டூர் மு.காளிமுத்து (17-Jan-17, 10:56 pm)
பார்வை : 3687

மேலே