முத்தல்

பத்து மாசம் வயித்துலயும் பல வருசம் லயத்துலயும் பாத்து பாத்து வளத்த என் ஆத்தா...
என் வாழ்க்கை நெனச்சி அழையுதய்யா ஊர் காத்தா...

நாவறிஞ்சி தப்பொன்னும் நான் செய்யல...
இந்த பூ பரிக்க ஒரு வண்டும் ஏன் வரல...
கருவாகி போகாம சருகாகி போனாலும் சந்தோசம்...
கன்னி கலியாம காலம் போனது என் தோசம்...

கலியாணம் கட்டுற தகுதி என்னக்கில்லையோ...
இந்த ஒலகத்து ஆம்புலக்கி நான் மணக்கலையோ...

மோகத்த தீக்கனும்னு கேக்கலங்க...
என் சோகத்த ஊர் உலகம் பாக்கலிங்க...
நாக்குக்கு நரம்பில்ல நலியும் பக்கம் பேச்சு...
என் வாழ்க்கைக்கும் வரம்பில்ல தெச மாரி போச்சு....

#முதிர்_கன்னியா மூலையில கெடக்குறனே ஓரமா...
இனி எதுக்கு நான் இந்த மண்ணுக்கு பாரமா...

#ஓடு_காஞ்ச_முட்டை நான் ஒன்னுக்கும் ஒதவ மாட்டேன்...
என் வீடு தேச்ச பொட்ட நான் இந்த ஒலகத்துக்கு வெளங்க மாட்டேன்...
சீக்கிரமா எனக்கொரு கேடு வந்து சாகனும்...
என் கூடும் வெந்து போகனும்...

எழுதியவர் : முகமட் நஷீம் (24-Jan-17, 12:35 am)
சேர்த்தது : Nazeem
பார்வை : 66

புதிய படைப்புகள்

மேலே