விழித்தெழு தமிழா
பாதிக்கப்பட்ட பின் போராடத் துணிந்தால்
நீ என்ன புரட்சிக்காரன்...
பழிவாங்குவதற்காய் மட்டும் ஆயுதம் ஏந்துபவனா
சமூகக் காவலன்...?
உசுப்பிவிட்டால் தான் எழுந்திருப்பேன் என்றால்
நீயா போர்வீரன்...?
ஓர் அபயக்குரல் போதாதா
போர்ப்பரணி பாட...
சகோதர சகோதரிகளுக்கு இழைக்கப்படும்
ஓர் அநீதி போதாதா யுத்தம் செய்ய...
சுய இழப்புக்காய்க் காத்திராதே...!
அழைப்புக்காய்...,