தாய்மொழி
தாய்க்கு நிகரேதுமில்லை புவியில்
தாய்போல் வந்தமைந்த தாய் மொழிக்கும்
நிகரேதுமில்லை என்றுணர்ந்தால்
தாய்மொழி மறந்து வேற்றுமொழி
மீது வைக்கும் மோகம் போகும்
தாய்மைபோல் தாய் மொழியும்
வையகத்தில் நிலையாய் நிலைத்திடுமே