ஒன்றிணைந்த மனங்கள்
ஒன்றிணைந்த மனங்களுமே
ஒற்றுமையாய்ச் செயல்பட்டால்
நன்றாகும் இவ்வுலகும்
நன்னெறிகள் பெருகிவிடும் !
சண்டைகளும் வாராது
சந்ததியும் உயர்வடையும்
பண்பாடும் மாறாது
பாரம்பரியம் சொல்லிடுமே !
சாதிமத வேறுபாடின்றி
சகோதரத்துவம் வலியுறுத்தச்
சமுதாயம் சீர்பெறவே
சமத்துவமாய் ஒன்றிணைவீர் !!
ஆக்கம் :- கவிஞர் . சரஸ்வதி பாஸ்கரன்

