மரம் தின்ற மனிதர்கள்
ஒரு விகற்ப பஃறொடை வெண்பா :
வரந்தரவே மண்ணில் விருட்சம் வளர்ந்து
அரணாய்ப் புவிக்கே அமையு மதனின்
தரமறி யாதிங்குத் தன்தேவைக் கென்றே
விரலேந்தும் கோடரி வேரை யறுக்க
நரகத்தின் பாதை நகர்ந்தேசெல் கின்றான்
மரமதைத் தின்றே நரன்......