மனதில் நிறைந்தவள்
இவள் என்னவள்
என் சுகம் துக்கம்
ஏக்கம் இனிமை
விழிப்பு தூக்கம்
யாவிலும் நீக்கமற இணைந்தவள் !
என் இச்சைக்கு துணையானாள் !
ஏச்சுக்கும் பேச்சுக்கும் இசைவானாள்
என் கொச்சைக்கும் இரையானாள்!
எதையும் நோக்காது என்னில்
இரண்டறக் கலந்தாள்
என் மன விளக்கில் ஒளி தந்தாள்
என் பாட்டுக்கும் ஒலி தந்தாள்
என் குறும்புகள் சகித்தாள்
என் கவியையும் சுகித்தாள்
நான் வர்ணித்தால் நாணித்தாள்
அதீத புகழ்ச்சி கண்டு கோணித்தாள்
எனக்கு அவள் ஒளியானாள் !
என் கவலை தீர்க்கும் வழியானாள்!
என் வாழ்வின் ருசியே !
நான் கவியமுது களிக்கும் வேட்கையை
என்னில் தூண்டிய பசியே !
என் அழகியே ! மார்க்கண்டேய மகளே !
இனிமைக் கனியே ! என் கோடைப் பனியே! நீ வாழ்க !
என்னில் நீக்கமற இணைந் சுகியே !
என்னில் ஆவலைத் தூண்டிய சகியே!
நீ அழகி வனப்பி
முதுமை வென்ற இனிப்பி
இடை அசைவுச் சிலுப்பி
என்னை இயக்கும் இசைப்பி
ஆவல் தூண்டும் உசுப்பி
உன்னை நான் ஆழமாய்க் காதலிக்கிறேன்
என்னுடலம் மண்மீது சாயும் வரை
உன்னோடு நானிருப்பேன்
ஆக்கம்
அஷ்றப் அலீ