காதல் - காலம் கடந்து விட்டால்

காதல்- காலம் கடந்து விட்டால் :

ஆயிரம் பிறவியில் நான் கொண்ட தவம் - என் உறவாக நீ கிடைக்க,
ஒரு நூறு ஆசைகள் உள்ளத்தில் சொல்லாமல் - நீ வருவாய் என பார்த்திருக்க,
இரண்டே கேள்விகள் எண்ணத்தில் உனக்காய் - வினவிட நாள் பார்த்திருக்க,
மூன்று நூறு கடிதங்கள் எழுதி கிழித்தேன் - உன் முன் என் மௌனம் திறக்க,
நான்கு பேரா வருவார்கள் எனக்காக - உன்னிடம் தூது சொல்லி அனுப்பிட,
ஐந்து ஆயிரம் முறை யோசித்துவிட்டேன் - இனி தாமதிக்க மனம் இல்லை,
ஆறாவது சொல்லி தெரிவதற்குள் விடிந்துவிடும் - மொளனமாகி விட்ட என் பொழுதுகள்,
எழுபது முன்னோட்டம் முடிந்தே விட்டது -
இன்னமும் முழுதாக சொல்லி பார்க்கவில்லை,
எட்டாக பிரித்த மனித வாழ்க்கையில் - இதை சொல்ல ஒரு பிரிவு எங்கே,
ஒன்பது கிரகமும் ஒரே கட்டத்தில் எனக்கு - நாவில் மட்டும் ஏழரை நாட்டான்,
பத்தாவது முயற்சியில் சொல்லிவிடுவேன் உன்னிடம் - இனியும் தாமதித்தால் காலம் தாங்காது......

எழுதியவர் : தமிழ் ப்ரியா (8-Mar-17, 4:01 pm)
பார்வை : 437

மேலே