ஒயிலா அழகா

உருகா மனமும் உருகும் - மெய்
. உணரா அறிவும் உணரும்
மெருகா உயிரும் மெருகும் - உனை
. மெச்சாக் நெஞ்சும் மெச்சும் !

பெருகா விழியும் பெருகும் - நிதம்
. பெருமா பிழைகள் உருகும்
முருகா முருகா முருகா - எழில்
. முனைவேல் குமரா சரணம் !

அயிலில் வினைகள் அழியும் - உன்
. அழகில் அமுதம் வழியும்
மயிலும் துணையாய்த் தொடரும் - எம்
. மதியில் நலமே படரும்

கயிலை பதியின் மகனே - உன்
. கடைகண் எமக்கு வரமே
ஒயிலா அழகா முருகா - உன்
. ஒருபேர் மொழிதல் தவமே !

-விவேக்பாரதி

படம் : சுதன் காளிதாஸ்

எழுதியவர் : விவேக்பாரதி (27-Mar-17, 12:45 am)
சேர்த்தது : விவேக்பாரதி
பார்வை : 78

மேலே