ஒயிலா அழகா
உருகா மனமும் உருகும் - மெய்
. உணரா அறிவும் உணரும்
மெருகா உயிரும் மெருகும் - உனை
. மெச்சாக் நெஞ்சும் மெச்சும் !
பெருகா விழியும் பெருகும் - நிதம்
. பெருமா பிழைகள் உருகும்
முருகா முருகா முருகா - எழில்
. முனைவேல் குமரா சரணம் !
அயிலில் வினைகள் அழியும் - உன்
. அழகில் அமுதம் வழியும்
மயிலும் துணையாய்த் தொடரும் - எம்
. மதியில் நலமே படரும்
கயிலை பதியின் மகனே - உன்
. கடைகண் எமக்கு வரமே
ஒயிலா அழகா முருகா - உன்
. ஒருபேர் மொழிதல் தவமே !
-விவேக்பாரதி
படம் : சுதன் காளிதாஸ்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
