மௌனம் - குறுங்கவிதை

மௌனம் ---- குறுங்கவிதை


கொல்லுகின்றாய் மௌனத்தால் மரகதமே !
கொள்ளைகொண்டாய் மனத்தினையும் அழகாக !
வெல்லுகின்ற கருவிழியால் மயக்குகின்றாய் !
வெந்தழலே என்செய்வேன் சொல்வாயே !
கல்மனமும் கரைந்திடுமே உன்னன்பில் !
காளைநான் ஏங்குகின்றேன் மொழிகேட்க !
சொல்லுகின்ற காதல்வரி வாழவைக்கும் !
சொல்லிவிடு விரைந்துநீயும் என்னிடமே !!!


ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (29-Mar-17, 10:41 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 87

மேலே