மௌனம் - குறுங்கவிதை
மௌனம் ---- குறுங்கவிதை
கொல்லுகின்றாய் மௌனத்தால் மரகதமே !
கொள்ளைகொண்டாய் மனத்தினையும் அழகாக !
வெல்லுகின்ற கருவிழியால் மயக்குகின்றாய் !
வெந்தழலே என்செய்வேன் சொல்வாயே !
கல்மனமும் கரைந்திடுமே உன்னன்பில் !
காளைநான் ஏங்குகின்றேன் மொழிகேட்க !
சொல்லுகின்ற காதல்வரி வாழவைக்கும் !
சொல்லிவிடு விரைந்துநீயும் என்னிடமே !!!
ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்