சலாவு55கவிதைகள்

அன்பே,
உன் தேகம் தொட்ட ..
தென்றல் காற்றும் ..
மோட்சம் பெற்று ..
என்னிடம் விட்டு சென்றது ..
உன் சுவாச சாரலை ..

கால சக்கரம் சுழல்கிறது ..
கடிகார சக்கரமும் சுழல்கிறது ..
என் காதல் சக்கரமும் சுழல்கிறது ..
என் நிலைமை சூழல் மாறுகிறது ..
உன் நினைவு சுமையும் கூடுகிறது ..
தாங்காத வலிகள் தருகிறது ..
நீங்காத ரணமாய் நீடிக்கிறது ..
நித்தம் உன்னை நினைக்கிறது ..

மூன்றெழுத்து கவிதை பாடம் ..
கற்று தந்தாள் ..
புரியாத பாஷை பேசி ..
தள்ளி சென்றாள் ..
அவள் காதல் எனும் ..
புனித நோயை என்னிடம் ..
விட்டு சென்றாள் ..
: ! : ! : ! : ! : ! : ! : ! : ! : ! : ! : ! சலா,

எழுதியவர் : சலாவுதீன் (30-Mar-17, 8:37 pm)
சேர்த்தது : சலாவுதீன்
பார்வை : 80

மேலே