இது தந்தைக்கோர் தாலாட்டு - தினக் கவிதைப் போட்டியாளர்

இது தந்தைக்கோர் தாலாட்டு - தினக் கவிதைப் போட்டியாளர்

கண்ணதாசன் சான்றிதழ் போட்டியாளர் .



இது தந்தைக்கோர் தாலாட்டு .
இது அன்பில் வந்த ஓர் ராகம் .
இது செந்நெருப்பில் தோன்றும் உதயம் .
இது கரையில்லாத கானம் . ( இது தந்தைக்கோர் ...)


படை மறந்த பாலகன் நானும்
பாசத்தால் வளர்கிறேன் .
மடை திரண்ட வெள்ளம் போலே
மண்ணுலகைப் பார்க்கிறேன் .
உறவாடும் உன்னைக் காண
உலகத்தை வியக்கிறேன் .
திறவாமல் திறக்கும் உந்தன்
வாய்மொழியைக் கேட்கிறேன் . ( இது தந்தைக்கோர் .... )


தருகின்ற மழலை முத்தம்
தவிப்பாகிப் பார்க்கிறாய் .
தருகின்ற என்றன் கொலுசொலிக்
காணாது திகைக்கிறாய் .
உறவாடும் பொழுதில் கூட அப்பா
உன்முகம் பார்க்கிறேன் .
கனவினிலும் நினைவினிலும்
கண்மயங்கிக் களிக்கிறேன். ( இது தந்தைக்கோர் .... )


உருகொண்ட உந்தன் உருவம்தான்
உலகத்தை ஆண்டது .
உறவாகி நின்றாய் எந்தன்
உள்ளத்தை நிறைத்தது .
உருவானக் கருவைக் கொண்டுக்
கவிதைநான் வனைவது ?
உனையும் நான் பாடாமல்
எத்தனைநாள் வாழ்வது ? ( இது தந்தைக்கோர் ... )


ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (6-Apr-17, 9:52 pm)
பார்வை : 66

மேலே