ஆறாவது அழிவு

இல்லை எனும் சொல்லுக்கு பயந்து ஆமாம் எனும் பதில்களை தொழைத்துவிடுகின்றோம்.
நிஜங்களை பயன்படுத்தாமல் பாதுகாப்பென பிரதிகளில் உழல்கின்றோம்.
கூரைகளை கொழுத்தி விட்டு நெருப்பின் நிழலில் உறங்கி புழுக்கமென புலம்புகின்றோம்.
விளைந்தவை யாவையும் விற்றுவிட்டால் மீண்டும் உழவு செய்ய வாங்கித்தான் ஆகவேண்டும் என்பதை மறந்துவிடுகின்றோம்.
கடவுள் விதி நேரம் என பற்றிகொள்ள பல தோனிகள் ஆக நீந்த மறுக்கின்றோம்.
வாழ்க்கை மிகவும் அழகானது
பொய்களும்தான்....

எழுதியவர் : சுரேஷ்குமார் (14-Apr-17, 12:07 am)
சேர்த்தது : சுரேஷ்குமார்
பார்வை : 95

மேலே