வேண்டுகிறனே

மூங்கிலானாலும்
முள்வேலியானாலும்
முகைவிரிக்க
மறு(ற)க்குமோ
முல்லைக்கொடி?
அப்போல் -
வாஞ்சை பெறினும்
வஞ்சகம் வரினும்
நெஞ்சகத்தில்
நிறுத்தாது
நீடுவாழ வரம்
அருள்வாய் அமலனே..

எழுதியவர் : மோசஸ் பிரான்சிஸ் (14-Apr-17, 11:44 am)
சேர்த்தது : மோசஸ் பிரான்சிஸ்
பார்வை : 82

மேலே