தாயே தமிழே

தமிழில்
உயிர் எழுத்து
மெய் எழுத்து
உயிர்மெய் எழுத்து
ஆயுத எழுத்து
கண்டுபிடித்தது
தனியொரு தமிழனா
அதுவொரு குழுவா...
மெய் சிலிர்க்கிறது
எழுத்துக்களின்
நேர்த்தி கண்டு...

பூமி சூரியனைச்சுற்றும்
ஒரு முழு ஆண்டை
சித்திரை துவங்கி
பங்குனி வரை
பன்னிரண்டு மாதங்கள்
ஒவ்வொரு மாதத்திற்கும்
இத்தனை நாட்கள்
என கனகச்சிதமாய்
கணக்காய் வகுத்தது
தனியொரு தமிழனா
அதுவொரு குழுவா...
மெய் சிலிர்க்கிறது
அணுபிசகா ஆண்டுகளின்
அமைப்பை எண்ணி...

மாதங்களுக்கு பெயர்
வைத்தது
தனியொரு தமிழனா
அதுவொரு குழுவா...
மெய் சிலிர்க்கிறது
மாதங்களின் பெயர்களின்
இனிமையை எண்ணி...

எழுத எழுத பேசப்பேச
தமிழ் மொழியின்
இனிமை கூட்டும்
தமிழ் இலக்கணங்கள்
பாங்காய் அமைத்து
மொழிச் செழுமைக்கு
வித்திட்டது
தனியொரு தமிழனா
அதுவொரு குழுவா...
மெய் சிலிர்க்கிறது
இலக்கணத்தின்
கம்பீரம் எண்ணி...

தொல்காப்பியன் கம்பன்
பாரதி இளங்கோவடிகள்
வள்ளுவர்...
பட்டுக்கோட்டையார்
கண்ணதாசன் வாலி
வைரமுத்து முத்துக்குமார்
இன்னும் எத்தனை எத்தனை
புலவர்கள் கவிஞர்கள்
இலக்கியங்கள்
படைப்புகள் கவிதைகள்...
மெய் சிலிர்க்கிறது
படைப்புகளின்
ஆளுமை எண்ணி...

புவியில் பிறந்திடும்
எல்லா தமிழ்க்
குழந்தைகளும்
செல்வந்தர்கள்தான்...
தமிழ் மொழி எனும்
உயில் எழுதா
நிரந்தர சொத்தோடு
பிறப்பதால்...

அழகு தமிழே!
என்றும் இறவாத் தாயே!!
வணங்குகிறோம் உன்னை
மிகப் பெருமிதம் கொண்டு...

இனிய தமிழ்ப்புத்தாண்டு
வாழ்த்துக்கள்!

அன்புடன்...
ஆர்.சுந்தரராஜன்.
🙏👍😀🙋🏻‍♂👏👌🌹🌺🌷

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (14-Apr-17, 8:27 am)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
Tanglish : thaayaye thamizhe
பார்வை : 110

மேலே