ஏமாற்றுதலும் ஏமாறுதலும்

மனிதா!
உன் மனம் நோக்கு.
ஏமாற்றும் எண்ணம் நமக்கேன்?
உன் சிந்தனையை சீர்தூக்கு.

நெல் விளையும் நிலம்தன்னில்
புல் விளைந்து வருவதைப்போல்
ஏரார்ந்த குணங்கள் கொண்டவனாயினும்
ஏமாற்றும் எண்ணம் அங்கிருக்கும்.
பேராசைத்தீயோ பொக்கெனப் பற்றும்போது
அவ்வெண்ணம் அடங்காது தீங்கிழைக்கும்.

வாழ்க்கை வயலில்
ஏமாற்றுதல் விதைநெல்.
ஏமாறுதல் விளைநெல்.

எழுதியவர் : மோசஸ் பிரான்சிஸ் (15-Apr-17, 4:31 pm)
சேர்த்தது : மோசஸ் பிரான்சிஸ்
பார்வை : 259

மேலே