காதலைத் தேடி

...........பல்லவி.........

இது கவிதை எழுதும்
புது காதல் பயணம்
என் வாழ்க்கை மாறுமா?
புது வசந்தம் திரும்புமா?
காதல்...நீ தான்
தேடல்...உனக்குள்
தொலைவோம் நமக்குள்...

(இது கவிதை எழுதும்..)

சரணம்-01

பார்வைகள் போதுமா
மௌனங்கள் பேசுமா
நினைவுகள் நீங்குமா
என் காதலும் வாழுமா
உன் கால்தடம் சேருமா??

(இது கவிதை எழுதும்..)

சரணம்-02

கனவுகள் நடக்குமா
கைவிரல் சேருமா
வானிலை மாறுமா
என் வானவில் தோன்றுமா
உன் காதலும் கிடைக்குமா??

(இது கவிதை எழுதும்...)

-உதயசகி-

எழுதியவர் : அன்புடன் சகி (25-Apr-17, 9:24 pm)
Tanglish : kaadhalaith thedi
பார்வை : 672

மேலே