பட்டால் தான் வாழ்க்கை சுட்டால் தான் நெருப்பு

நெருப்பு உன்னைச் சுடும் என்று
தொட்டால் தானே அது புரியும்
நடக்கும் பாதை எது வென்று
நடந்தால் தானே அது புரியும்
பட்டால் தானே அது வாழ்க்கை
சுட்டால் தானே அது நெருப்பு
மலையில் மடியில் வளர்ந்த மரம்
மரத்தில் பழுத்து ருசிக்கும் பழம்
இலேசாய் உனக்குக் கிடைத் திடுமா
ஏறிக் களைத்து இன்னல் சகித்தால்
மலையை அடைவாய் பழம் பறிப்பாய்
இதுபோலே வாழ்வினில் எழும் துன்பம்
நீசகித்து நடை பயின்றால் ஓர்நாளில்
வெற்றிக் கனியைப் பறிப்பாய்
கட்டிக் கரும்பைச் சுவைப்பாய்

ஆக்கம்
அஷ்ரப் அலி

எழுதியவர் : alaali (4-May-17, 1:04 pm)
பார்வை : 241

மேலே