முகவரி என்ன
உன்னிளம் காந்தப் பார்வையால்
என் முழு கவனத்தையும் ஈர்த்தவளே...
கள்ளம் கபடமின்றி தினம் பேசியே
நெஞ்சில் காதலை நிரப்பியவளே....
உன்னால் இன்று
தன்நிலை மறந்து
தெளிவற்றுக்கிடக்கிறேன்....
உன்னைக் கண்ட போதையில்...
நீ வரும் பாதையில்....
அழகே...
காணும் கண்களையெல்லாம் மயக்கி
தெளிவாக திரியும் நிலவே...
உன் முகவரிதான் என்ன?
செவ்வாய் திறந்து சொன்னால்...
காதல் கவிதை வரைந்து அனுப்புவேன் நானும்....!
நீதான் எனக்கு துணையாக வேணும்...