ஏமாற்றம்

உன் அழகிய கைவிரல்களை
தொட்டு பார்க்க வாய்ப்பு கிடைத்ததில்லை
உன் அழகிய பாதங்களின்
மென்மையை தொட்டு பார்த்ததில்லை
கண்மூடி இருக்கும் உன் கண்களும்
அதற்கு காரணமாக இருக்கும்
உன் இமைகளும் இதுவரை அறிந்ததில்லை
படபடவென அடித்திக் கொண்டிருக்கும்
உன் இதயத்துடிப்பை கூட கேட்டதில்லை
தூக்கத்தில் நீ முதன் முதலாக சிரித்திக்கொள்ளும்
அழகையும் உணர்ந்ததில்லை -ஏனென்றால்
என் எதிர்பார்ப்பின் கரு கலைந்ததினால் ............

நான் தொலைத்த என் கருக்குழந்தை .................

எழுதியவர் : கஸ்தூரி (30-May-17, 10:27 am)
Tanglish : yematram
பார்வை : 183

மேலே