நிஜங்கள்

நாம் கொஞ்சம் நிஜங்களில் இருப்போம்...
இந்தக் கணத்தின் நொடியில்
நடந்ததில் திளைப்போம்
உணவெனில் அதன் சுவையில் லயிப்போம்
மழலையெனில் அதன் சிரிப்பில் மறப்போம்
வேலையெனில் அதன் முனைப்பில கிடப்போம்
கவலையெனில் அதில் மூழ்கித் தவிப்போம்...
இன்றையை இப்பொழுது முழுதாய் சுவைத்து
நாளையை நாளை எதிர் கொள்வோம்.
-----முரளி

எழுதியவர் : முரளி (30-May-17, 8:08 am)
சேர்த்தது : முரளி
Tanglish : nijangal
பார்வை : 260

மேலே