நின்விழி வழியும்

சாயமற்ற
நின்விழி வழியும்
துளிகளினுடன்
என் பிம்பமும்.

விரல் நுனித்
தொட ஏங்கும்
துளிகளினுடன்
என் பிம்பமும்.

தொட்டால்
வீழ்ந்துவிடும்
துளிகளினுடன்
என் பிம்பமும்.

கொன்று தெறித்த
குருதியாய்!- நீர்த்
துளிகளினுடன்
என் பிம்பமும்.

விழிநீப்பின்
உயிர்பிரியும்
துளிகளினுடன்
என் பிம்பமும்.

எழுதியவர் : மனோஜ் கியான் (30-May-17, 11:54 pm)
பார்வை : 398

மேலே