உன்னாலே
உன்னாலே உன் கண்ணாலே
நான் தன்னாலே
பறக்கிறேன்
விண்ணிலே
இரவெல்லாம் செவிகளில்
உன் குரல்
பகலெல்லாம் விழிகளில்
உன் முகம்
எங்கே தொலைத்தேன் என்னை
நீ கண்டுபிடி
உனக்குள் நான் இருந்தால்
என்னை அங்கேயே விட்டு விடு
ஒரு முறை பாராயோ
என்னுள் சேராயோ
நீ என் உயிருக்குள் கலந்து விட்டாய்
அடி மனதில் சேர்ந்து விட்டாய்
அடையாளம் இல்லாமல்
என்னை மாற்றி விட்டாய்
அணு அணுவாய் சாகிறேன்
அரை நிமிடம் உயிர் வாழ்கிறேன்
உனை பார்க்கும்போது மட்டும்
மொழி அறியா சிறுபிள்ளை
போல் ஆகிரேன்.
கவியின் காதலன்
அ : ஏனோக் நெஹும் .
#enoch_nechum