அழகான வாழ்க்கை

♥கணவன் மனைவி அன்பு...
♥இரவு நேரத்தில் கணவன் உண்டது போக மீதமிருப்பதை உண்ணலாம்
என்று காத்திருந்து ...
கணவனும் வந்து ...
அவன் பக்கத்திலிருந்து பரிமாறி ...
♥பேச்சு சுவாரஸ்யத்தில் கணவன்
மிச்சமில்லாமல் உண்டு முடிக்க ...
மலர்ந்த முகத்தோடு
பாத்திரங்களை ஒதுக்கி விட்டு
வரும் மனைவியிடம் ....
♥"நீ சாப்பிடவில்லையா ?"
என்று கணவன் கேட்க ....
"எனக்கு பசியாக இருந்தது.
அதனால் நீங்கள் வருவதற்கு முன்னாலேயே
உண்டு முடித்து விட்டேன்
"என்று சொல்லும் மனைவியை வரமாகப் பெற்றவன்....
என்ன செய்வான் ?
♥சட்டையை மீண்டும்
மாட்டிக்கொண்டு வெளியே கிளம்பும் கணவனிடம்"
இப்போதானே வந்தீங்க.
திரும்பவும் எங்க போறீங்க ? "
என்று கேட்டவளுக்கு ...
"ஒரு மாத்திரை வாங்க மறந்துவிட்டேன் "
என்று கூறிவிட்டு ...
சற்று தூரம் அலைந்து
♥நல்ல ஹோட்டலில்
ருசியான உணவு வாங்கி வந்து ...
"இந்தா சாப்பிடு... "
என்று சொல்லும்போது
அவள் கண்கள் லேசாக கசிய...
உண்ணுவாளே....
அதற்குப் பெயர்தான்,,
!!~~அழகான வாழ்க்கை~~ !!

எழுதியவர் : கவிழகி செல்வி (3-Jun-17, 10:41 am)
சேர்த்தது : selvi sivaraman
Tanglish : azhagana vaazhkkai
பார்வை : 412

மேலே