என் இதய டாலுவுக்காய் 4

முகில் கொஞ்சிடும்
மலை முகடினில்
இளங்கதிர் கொஞ்சிடும்
பனிப்பூக்களில்....

வெயில்
தாங்கிய கற்பாறைகள்
மழை துளியினில்
கவிப்படித்திடும்....

வனக்குருவிகள்
வளம் வந்திடும்
குயில்கூட்டங்கள்
இசை அமைத்திடும் ...

மயிலாட்டங்கள்
அரங்கேறிடும்
அனல் மேகங்கள்
இளைப்பாறிடும் ....

சிறகடித்தலில் சிறை
பிடித்திட சிலப்பறவைகள்
காற்றிடையே
விளையாடிடும் ....

புதுப்பூக்கள் மணம்பரப்பிடும்
இளமாங்கனிகள்
தேன் செறிந்திடும் ...

நெடும் பயணமும்
உன் நினைவுகளும்
உயிர்க்கூச்சலில்
உரையாடிடும்
உயிரோவிய எனதழகே ....

எழுதியவர் : கார்த்திக் -நெல்லை (19-Jun-17, 7:40 pm)
சேர்த்தது : கார்த்திக்
பார்வை : 136

மேலே