உடம்பை வளர்க்க ஓர் உபாயம்

அரிசி,கோதுமை,சோளத்தை
அன்னமாக்கி சாப்பிட்டு
நவதானியங்களை சுண்டலாக்கி
மாலைப் பொழுதின்
மயக்கம் போக்கி
கலப்படம் இல்லாத கடலை
எண்ணை வித்துக்களில்
இனிப்புருண்டை செய்து
காய்கறிகளை இனங்கண்டு
பழவகைகளோடு பகிர்ந்துண்டு
பால் அருந்தி
சக்தி தரும் உணவுளை
சமையலில் சேர்த்து
நேர்த்தியாய் நான் வளர்ந்தேன்
உடம்பை வளர்க்கும்
உபாயம் அறிந்தேன்
உடம்பை வளர்த்தேன்
உயிர் வளர்த்தேனே

எழுதியவர் : (26-Jun-17, 12:10 pm)
சேர்த்தது : kavitha
பார்வை : 89

மேலே