மழை
எங்கெங்கோ மழைப் பெய்கிறது
இல்லையென்று சொல்லவில்லை
ஆனால் எங்கள் சென்னையில்
இன்னும் மழைப் பெய்யவில்லையே
என்ன செய்வது புரியலையே
இப்போ வரும் அப்போ வரும்
நாளை வரும் என்று ஓர்
நிமித்திகன் போல்
வானிலை மையம் முன்னறிவிப்பு
பல தினம் தினம் தந்தவண்ணம் !
இதுவரை எம் சென்னப்பட்டினத்தில்
சில தூற்றலோடு நின்றுவிட்டது
ஏறி,குட்டை, குளங்களில் இன்று
நீரில்லை சேரும் சகதியும் தான் மிச்சம்
குடிநீர் வாரியமும் தண்ணீர் கொடுக்க
திண்டாடுகிறது ; இப்படியே நீடித்தால்
தண்ணீர் பஞ்சம் வருவது திண்ணம்
அதனால் மழையே நீ இன்னும்
காலம் தாழ்த்தாது வந்துவிடு
வேண்டும் வரை பொழிந்துவிடு
மக்கள் தாகத்தை தீர்த்துவிடு
நீ வாராமல் போனால் இப்போது
நீ வரும்போது இங்கு இருப்பார் யாரு ?
காலம் கடந்த பின் கிடைக்கும் நீதியும்
காலம் கடந்து வரும் மழையும்
கிடைத்தும் ஏது பயன் ?
அதனால் மழையே இன்னும்
காலம் தாழ்த்தாமல் வந்துவிடு
அளவாய் மிதமாய் பெய்துவிடு
ஏழைகள் தாகத்தை தணித்துவிடு