என்மீது கோபமா

வான்நிலா தேய்ந்து
வளர்வதை போல்,
என்நினைவுகள்
மலர்கின்றதடா,
.
வளர்ந்தபின் தேயும்
என்பதை அறிவேன்,
வளர்வதும் தேய்வதும்
காதலின் இயல்புதானடா,
.
என்மீது கோபம்
குறையவில்லையா,
ஊடல் கொள்வது
கூடலுக்கு தானடா,
.
உன்வருகைகாக
பூத்திருக்கும் ஆம்பல் நான்,
விரைவில் வந்து உன்
மதிமுகம் காட்டடா,
என் காதலா........................

எழுதியவர் : வாசு செ.நா (28-Jun-17, 1:22 pm)
பார்வை : 425

மேலே