வட அமெரிக்கத் தமிழ் சங்கப்பேரவை fetna 2017 - ஒரு பார்வை

படிக்கும் முன் முன்னுரை - நான் எந்த விதமான சாரிகளையோ , இசங்களையோ சேர்ந்தவன் இல்லை .

வட அமெரிக்கத் தமிழ் சங்கப்பேரவை விழா-2017 என்று கேள்விப்பட்டதும் வழக்கம் போல மற்றும் ஒரு விழா , நிறைய போரடிக்கும் இருந்தாலும் பரவாயில்லை புதிய மனிதர்களை சந்திக்கலாம் என்றுதான் போனேன் .

ஆனால் இந்த விழாவில் நிறைய ஆச்சிரியகரமான இல்லைகள்.

குத்துவிளக்கு இல்லை , கடவுள் வாழ்த்துப் பாடல்கள் இல்லை , பரதநாட்டியம் இல்லை , மூன்று நாட்கள் விழாவில் எங்கேயும் கடவுள் படங்கள் இல்லை , எல்லாவற்றுக்கும் மேலாக , புரியாத மொழியில் ராக ஆலாபனைகளும் , கண்ணா , கிருஷ்ணா என்று நீண்ட நேரம் யாரும் கூப்பிடவும் இல்லை .

முற்றிலும் மாறாக ,திருக்குறள் , நாட்டுப்புற பாடல்கள் , பொய்க்கால் குதிரை , கரகாட்டம் , மயிலாட்டம் , கும்மி , இலக்கிய வினாடி வினா , மழலைகளுக்கான எழுத்து , குறள் போட்டிகள், அதிசியமாக சில ஒப்பாரிப் பாடல்கள், அதிகாரப் பறை முழக்கம் , மருதநாயகம் (மேடை நாடகம் ) என கலந்துகட்டி அசரடித்தது இவ்விழா .

அது மட்டுமா , ஈழத்து தமிழர்களின் வலியையும் , விளிம்பு நிலை மக்கள் எதிர்கொள்ளும் சவால்களையும் , தமிழ் நாட்டின் தற்போதைய அரசியல் நிலமையும் , நம் மக்களின் மீதும், வளங்களின் மீதும் , , விவசாயத்தின் மீதும் , திட்டம் போட்டு ஒடுக்க பார்க்கும் நுண்ணிய காழ்ப்புணர்ச்சியை தூண்டும் அரசியலையும் உணர்ந்து கொள்ளும் களமாகவும் அமைந்தது .

நல்ல துவக்கம் ! இந்தப் போக்கு பரவ வேண்டும் , தொடர வேண்டும் .

பறை இந்த விழாவின் தேசிய ஒலி என சந்தேகத்துக்கு இடமில்லாமல் குறிப்பிடலாம் !!! அரங்கு அதிரும் வண்ணம் திரும்பத் திரும்ப ஓங்கி ஒலித்தது பறை .

ஒடுக்கப்பட்ட மக்களின் ஒலியாக இருந்தது கொஞ்சம் கொஞ்சமாக மாறி அனைவரும் கற்றுக்கொள்ள விரும்பும் வாத்தியமாக இருப்பது பெருமைக்கு உரியது . உடுக்கையையும் கொஞ்சம் சேர்த்து கொண்டீர்களானால் மிக்க மகிழ்ச்சி !

விழாவில் பகிரப்பட்ட முத்துக்கள் சில . யார் என்ன சொன்னார் என்பதை உங்களின் கற்பனைக்கே விட்டு விடுகிறேன் .

தயவு செய்து ரஜினியை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு அடாதீர்கள் ! ஒருவர் அப்படி என்றால் சினிமா உலகில் அறிவு ஜீவி என்று மதிக்கப் பட்ட இன்னொருவர் அந்தரங்கத்தை நிறைய கேமிரா கொண்டு ஒளிபரப்புகிறார் !

தமிழ் இலக்கிய ஆராய்ச்சி கழகத்திற்கு நிதி ஒதுக்கியும் , அதை அரசாங்கம் மறந்தும் வெகு காலம் ஆகிவிட்டது .

தமிழர்களுக்கு ஆவணப் படுத்துதல் என்றால் என்னவென்றே தெரியவில்லை .

தமிழ் இலக்கியங்களில் உள்ளவற்றில் பக்தி வேண்டும் என்றால் பக்தியை பாருங்கள் , பக்தி புடிக்கவில்லை
என்றால் தமிழின் செழுமையை பாருங்கள் , ஆனால் முற்றிலுமாக ஒதுக்கி விடாதீர்கள் .

மக்களின் வாழ்க்கையையும் , நடந்த உண்மைகளையும் அப்படியே சொல்வதுதான் நாடகம் திரித்துக் கூறுவது இல்லை .

தமிழின் பெருமையையும் , இலக்கியங்களையும் இளைய தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் .

உலகத் தமிழர்கள் ஒன்றுபட்டால் அரசாங்கத்துக்கு செயல்பட்டே ஆக வேண்டிய மிக பெரிய அழுத்தத்தை தரலாம் .

சில சமயம் எதிர்ப்பாராத தருணத்தில் , பிரபலங்களை விட நம் சந்திக்கும் அசாதாரண மனிதர்கள் எளிதாக நம் பார்வையை முற்றிலுமாக மாற்றிவிடுவார்கள் . இது fetna வில் நான் பங்கேற்ற கலந்துரையாடல்களில் எனக்கு நேர்ந்தது .

முடிவுரை :

தமிழர்களாகிய நாம் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் உள்ளோம் .

சாதி , மத வேறுபாடுளையும் . தலைவர்கள் என்று சொல்லிக்கொண்டு பிளவைத் தூண்டும் பைத்தியக்காரர்களையும் ஒதுக்கிவிட்டு நாம் தமிழ்நாடு அழிந்து போகாமல் இருக்க ஒன்றுபட வேண்டிய நேரமிது !!!

எந்த தேவதூதனும் நமக்காக குதித்து விடப் போவதில்லை !!! பெரியார் பூமி என்பதை அழுத்தமாக நாம் நமக்கே நிருபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் .

fetna வில் சந்தித்த ஈழத்து சகோதரியின் குரல் இன்னும் இடைவிடாமல் ஒலித்துக் கொண்டிருக்கிறது . " ஈழத்து தமிழர்களை தமிழ்நாடு காப்பாற்றும் என்று நம்பி கொண்டிருந்தோம் , ஆனால் இப்போது தமிழ்நாட்டை யார் காப்பாற்றுவது ?"

- பாவி

எழுதியவர் : பாவி (5-Jul-17, 6:52 am)
பார்வை : 595

சிறந்த கட்டுரைகள்

மேலே