அவள் தந்த தனிமை

மழைத்துளியில்
கரைந்திட்ட கண்ணீர்த்துளி
அவள் தந்த சோகம்!!!.....

மரகத மின்னல்கூட
புலப்படவில்லை
அவள் தந்த இருளால்!!!....

தொண்டையில் சிக்கிய முள்ளாய்
உள்ளும் செல்லாமல்
வெளியும் வராமல்
அவள் தந்த தனிமை!!!....

பாய் மர ஓடம்
காற்றின் அசைவை வட்டமிடுவதை போல்
என் மனம் வட்டமிடும்
அவள் தந்த நினைவில்!!!.....

-மூ.முத்துச்செல்வி

எழுதியவர் : மூ.முத்துச்செல்வி (7-Jul-17, 4:13 pm)
சேர்த்தது : மூமுத்துச்செல்வி
பார்வை : 139

மேலே