உன்னைப் பிரிந்த

நீரின்றி
தவிக்கும்
மீனின்
நிலைதான்
நீ......
இன்றி எனக்கு......!!

உள்ளம் நோகுதம்மா
உயிர்
உயிரை
பறிக்குதடி.....ஏனோ
என்னுலகம்
வெறுக்குதடி......!!

இரவோடும்
பகலோடும்
இவனுக்கு
கோபம்......
அருகில்
அவள்
இல்லாத போது.....!!

விழிகளில்
வீழ்ந்தவள்
விழிநீராய்
வீழ்கிறாள்.....
வீரனின்
வீரம்
கண்களின்
ஈரத்தில்
வேதனை ஆனதே......!!

அவளோடு
அருகிருந்து
பேசும்
நாட்களுக்காக
ஆவலோடு
காத்திருக்கிறேன்......!!

கன்னத்தில்
முத்தம்
வாங்கி.....உன்
கன்னத்தில்
முத்தம்
கொடுத்துவிட
காத்திருக்கிறேன்......!!

உயிருக்கு
உயிராய்
உன்னைக்காதலித்து
உன்னைப்பிரிந்து
உருக்குலைந்து
போனேன்.....உண்மையில்
தொலைவினில்
தொலைந்தே
போனேன்......!!

எழுதியவர் : தம்பு (8-Jul-17, 3:03 am)
சேர்த்தது : தம்பு
Tanglish : unnaip pirintha
பார்வை : 425

மேலே