காஷ்மீர்

உன் மொழி தெரியாது ...
உன் வலியை உணர்கிறேன் .....என் மொழியில் .....
நீ சந்தோசமாக நிம்மதியாக வாழ வேண்டும் உன் மண்ணில் .....

இந்தியா ரத்தவாடை அடிப்பது தெரியலையா ...
மனிதர்களை கொல்வது தான் உன் பாதுகாப்பா ...
வாழவிடுங்கள் மனிதத்தோடு காஷ்மீரை ...
இந்தியாவிற்கு தேவையாக இருக்கலாம் காஷ்மீர் ...
ஆனால் மக்களுக்கு தேவையோ நிம்மதி ...
எங்களை விட்டுவிடுங்களேன் என்று அவர்கள் சொல்வது உங்கள் செவியில் கேட்கவில்லையோ .....
காஷ்மீரை மூன்று நாடுகளும் அபகரிக்காதீர் ...
அது அவர்களுடைய நாடு ...வீடு ... மக்களை நிம்மதியாக வாழ விடுங்கள் ...

பூக்கள் மீது ரத்த வாடை வேண்டாம் ...எங்கள் பூமி எங்கும் ரோஜாத்தோட்டம் ஆகட்டும் ...
எங்கள் மண் எங்களுடையது ...யாருக்கும் அனுமதி இல்லை ... யாரும் எங்களை தொந்தரவு செய்ய வேண்டாம் ...
எங்களுக்கு தேவை எல்லாம் அமைதியான எங்கள் காஷ்மீர் ...
காஷ்மீர் காஷ்மீரிகளுக்கே ......

இறைவா எங்கும் மனிதம் படரட்டும் ...( மனிதம் தான் இறைவன் )
இயற்கை பூமி ரத்த பூமி ஆக வேண்டாம் ... ( இயற்கை தான் சுவாசம் )

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (11-Jul-17, 7:12 am)
பார்வை : 1852

மேலே