வளையற் சிந்து

உள்ளத்திலே வருத்தமென்றால்
உடைந்துவிடு வாயா - மது
ஊற்றிக்குடிப் பாயா - உன்
உயிரைவிடு வாயா - தடை
உடைத்தெறிந்து முன்னேறிட
உழைத்துப்பிழைப் பாயா ?

கள்ளையுண்டால் போய்விடுமோ
கவலையெல்லாம் ஓடி - தாலி
கட்டியவள் வாடிக் - கண்
கலங்கிடுவாள் கூடிப் - பின்னும்
கட்டுப்பாடு இல்லையென்றால்
காலன்வரும் தேடி ...!!!
சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (19-Jul-17, 1:22 am)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 70

சிறந்த கவிதைகள்

மேலே