முந்தானை தன்னில் மகிழ்ந்தாடி

முந்தானை தன்னில் மகிழ்ந்தாடி கூந்தலிலும்
சொந்தம்கொண் டாடும்பூந் தென்றல் இளங்காற்றே
வேறெந்த வேலையு மேயில்லை யாஉனக்கு
கூறுபூந்தோட் டம்வாடு தே

----இரு விகற்ப இன்னிசை வெண்பா

முந்தானை தன்னில் மகிழ்ந்தாடி கூந்தலிலும்
சொந்தம்கொண் டாடும்பூந் தென்றலே --அந்தியில்
வேறெந்த வேலையு மேயில்லை யாஉனக்கு
கூறுபூந்தோட் டம்வாடு தே

----இரு விகற்ப நேரிசை வெண்பா

எழுதியவர் : கவின் சாரலன் (16-Mar-25, 11:44 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 9

சிறந்த கவிதைகள்

மேலே