மதியும் முகமும்
கண்மை அழியா கண்மூடி
இளம்பிறை இதழ் இரண்டும் இனைந்தே இருக்க...
கொடி போல் முன் நெற்றியில்
சிகை படர
பஞ்சணையில்
படுத்திருக்க...
ஒற்றை வெண்விழி
பார்வை அவளின் மேல்
படர்ந்தது
அறையின் தாழ்வார முகட்டிலிருந்து....
ஒற்றை கண்ணனுக்கு எட்டிய பார்வை
இருவிழி இருந்தும்
குறுடான கணமே எனக்கு....
-இந்திரா