மலர் ரோஜாவே மௌனம் ஏனோ

மலர் ரோஜாவே
மௌனம் ஏனோ ?
முள்ளால் சூழ்ந்து நிற்கிறோமே
என்ற வருத்தமோ ?
மங்கை ஒருத்தி பறித்து
சூடவில்லையே என்ற ஏக்கமோ ?
கவிஞன் ஒருவன் போற்றிப்
பாடவில்லையே என்ற ஏமாற்றமோ ?

இதழ்களில் வண்ணங்கள் ஏந்தி
இதயத்தில் தேன் ஏந்தி
மெல்ல மலரும் ரோஜாவே
எனக்காக நீ உனக்காக நான்
என்றேன் !
சிரித்தது ரோஜா !
-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (20-Jul-17, 8:24 am)
பார்வை : 153

மேலே