என் அம்முக்குட்டிக்கு

அம்மு ...
உன்ன எவ்ளோ பிடிக்கும்னு வார்த்தையில சொல்ல வரல ...
வாழ்ந்து காட்டணும் அம்மு ...
உன்ன எதுக்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டேன் செல்லம் ...
நீ எனக்கு வேணும் கண்ணம்மா ...

உன் தாத்தா பாட்டி (என் அப்பா அம்மா )
பார்த்து
உன் அப்பாவின்(என்னுயிரில் என்னை கரைத்ததும் ) கரத்தில் என்னை தாரை வார்த்த பின்
உன் அண்ணா ( என் பட்டுக்குட்டி கண்ணா ) வை பெற்றிட வேண்டும் ...
அடுத்த குழந்தையாய் நீ பிறந்திட வேண்டும் ...
காரணம் உனக்கொரு அண்ணன் வேண்டும் ...
அண்ணன் தங்கை பாசத்தை நீ அனுபவிக்க வேண்டும் பட்டு ...
எனக்கு என் இரண்டு பிள்ளையும் ஒன்று தான் ...
உன் வருகைக்காய் மொத்த குடும்பமும் காத்திருப்போம் கண்ணம்மா ...
உன் பெரியம்மா ( என் அக்கா ) உன்னை வரவேற்க ஆவலாக உள்ளார்கள் ...
உன் அண்ணா ( சாரு அண்ணா , கிருத்திக் அண்ணா ) உன்னை பார்க்க , உன்னோடு விளையாட மிகவும் ஆசையோடு இருக்கிறார்கள் ...
உன்னை தூக்கி கொஞ்சி விளையாட உன் மாமன் ( என் அண்ணா ) விரும்புகிறார் ...
உன்னுடைய தாத்தா பாட்டி (என் அம்மா அப்பா = என் மாமியார் மாமனார்) உனக்கு நிறைய நல்ல கதைகளை கூறி உன்னை தாலாட்டு பாடி தூங்க வைப்பார்கள் ...

நானும் அவரும் உள்ளவரை
உன்னை கண்கலங்க விட மாட்டோம் கண்ணம்மா ...
நீ கண்கலங்கினால் ...
என் உடல் துடிக்கும்
உயிர் நின்று விடும் கண்ணம்மா ...

வாழ்க்கையின் எல்லா நிலைகளையும் நீ அறிய வேண்டும் கண்ணம்மா ...
ஏற்ற இறக்கம் இரண்டுமே வாழ்க்கை ...
சறுக்கினால் சரிந்து விடாதே ...சரித்திராமாய் எழு அம்மு...
உன் வாழ்க்கை உன்னுடையது ...
நீ நீயாக இரு .....
பெண்மைக்கு எடுத்துக்காட்டாய் ...வாழ்ந்து (வென்று)காட்டிட வேண்டும் ...
புகுந்த வீட்டில் சிறந்தவளாக வாழ வேண்டும் ...
என்றும் என் மகள் மனிதினி .....

எப்பொழுதும் நான் உன்னுடன் தான் இருப்பேன் செல்லம் ...
எனக்கு எப்படி சொல்லணும்னு தெரியல ...
நீ என் தமிழ் அம்மு ...
உன்னை என்றும் உயிரில் சுமக்கும் உன் அம்மா பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (21-Jul-17, 7:26 am)
பார்வை : 5755

மேலே