உந்தன் பிரிவு

உந்தன் பார்வை காண
மனம் கிடந்தேங்குதடி நதியே!
உந்தன் பலம் நானென்று உணர்ந்தவன்
எந்தன் பலவீனம் நீயென உணர்கிறேன் இன்று!
நதிநீரை மறந்தவன் இன்று
கானல்நீருக்காக ஏங்கித் தவிக்கிறேன் !
நெடுந்தூரம் உன்னுடன் பயணித்த காலம்
சிறு நொடியென தோன்றுதே நதியே !
நொடிப்பொழுது உன்னை காணாத இந்நேரம்
ஒரு யுகமென தோன்றுதடி அன்பே !
நீ அழைக்காத என் பெயரும் கூட
வெறும் வார்த்தையென தோன்றுதடி நதியே!
எனக்குள் இருக்கும் சோகத்தை வெளிக்காட்ட
எந்தன் ஆண்மை தடுக்கிறதே
இருந்தும் வெளிப்படும் சிறுதுளிக்கண்ணீரைத் துடைக்க
உந்தன் கைகளைத் தேடுகிறேன் நதியே !

எழுதியவர் : விக்னேஷ் நதியா (7-Aug-17, 9:40 pm)
Tanglish : unthan pirivu
பார்வை : 473

மேலே