மங்காத்தா

என் எழுத்துலக நண்பரும் மற்றும் "எழுத்து.காம்" மின் பழைய உறுப்பினருமான "மங்காத்தா" அவர்களை பற்றி என் எண்ணத்தில் உதித்தவை, உங்கள் பார்வைக்கு.

மங்காத்தா
(என் எழுத்துலக நண்பர்)

மங்காத்தா எனும்
மறு பெயர் கொண்ட
மனிதரை பற்றி
மட்டற்ற
மகிழ்ச்சியுடன்
மனதில் தோன்றியதை
மக்களோடு பகிர்கிறேன்
மதியின் சதவிகிதம்
மலையளவு பெற்றவர்
மாற்று சிந்தனை
மடமடவென தோன்றும்
மகளிர் பற்றி
மதிப்போடு எழுதுபவர்
மண்ணில் பிறந்த
மறத்தமிழர்
மாயாஜாலத்தை
மதியாதவர்
மகேசனையே
மதியால் அளந்தவர்
மாபெரும் மொழிக்கு
மானத்தோடு
மரியாதை தருபவர்
மண்ணில் பொதிந்திருக்கும்
மாபெரும் ரகசியத்தை
மதிநுட்பத்தோடு
மறுபரிசீலனை செய்ய துடிப்பவர்
மலை போல் ஞானம்
மலையருவி போல் சிந்தனை தொடர்
மது போல் மயக்கம் தரும்
மதுர சொற்களை தருபவர்
மாற்று மொழிகளிலும்
மருகி நிற்பவர்
மர்மம் என்ற சொல்லை
மடமடவென்று உடைக்க துடிப்பவர்
மதியாதாரை
மறக்கத் தெரிந்தவர்
மதி விதி இரண்டும்
மானிட இனத்தின்
மாபெரும் சக்தி என்றாலும்
மதி வலுவானதா
மதி வலவிழந்ததா, என
மனதிடம் விவாதம் செய்பவர்
மனோதிடம் வலுவாக உள்ளவர்

ஆனந்த் சுப்ரமணியம்
தேதி - 04.6.17. நேரம். - காலை 9.57 மணி

எழுதியவர் : ஆனந்த் சுப்ரமணியம் (11-Aug-17, 9:44 pm)
பார்வை : 194

மேலே