மீனும் நானும்

அன்றைய தினம்...
ஆற்றின் நீரில் மீன் பிடிக்க
ஆளுக்கொரு பக்கம் நின்றோம்....
உன் துப்பட்டாவை வலையாக்கி....
உன் துப்பட்டா என்பதாலோ என்னவோ அறியேன்...
உயிரையும் துச்சமென...வேண்டுமென்றே
எண்ணி....வலையில் சிக்கத் துணிந்தது
வண்ண மீனொன்று...

என்னவளே...
மீனின் அளவிற்குத் தியாகி
நானில்லை தான்...

எனினும்.....
விளைவு ஒன்றே !!!
உயிர் பிரிதல் !!!

"நம் வலையில்" சிக்க அம்மீன்
நீரை நீங்கினாலும் சரி....
"நம் காதல் வலையில்" சிக்கிய நான்
அவ்வலையை நீங்கினாலும் சரி....

விளைவு ஒன்றே !!!

எழுதியவர் : மகேஷ் லக்கிரு (15-Aug-17, 11:14 pm)
சேர்த்தது : மகேஷ் முருகையன்
Tanglish : meenum naanum
பார்வை : 359

மேலே