கண் மையோடு என் உயிரும் கரையுதே
கையோடு கை உரசி
கரையோரம் நடக்கையில
கண்ணங்குழியில் விழுந்தவன்
இன்னும் கரை வந்து சேரலையே
கண்ண வச்சு களவாட வந்தவளே
கையபிடிச்சு காதல் ஏன் சொல்லலையே?
கண்ணீர் துளியில் கண் மை கரையுதே
கண் மையோடு சேர்ந்து
என் உயிரும் கரையுதே.