ஊரே உறங்கிக் கொண்டிருக்க

ஏனோ ஏனோ ஆட்கொள்கின்றாய்
தானா தானா ஆள் கொல்கின்றாய்
நீயோ நீயோ ஆ சிரிக்கின்றாய்
நானா நானா பூ சிலிர்க்கிறேன்

ஊரோ உறங்கிக் கொண்டிருக்க என்
உயிரோ கிறங்கிக் கொண்டிருக்கிறது
சேவல் விளித்துக் கொக்கரக்கோ பின்
தூவல் வரைந்து தூங்குகிறேன்

காவல் நடந்து கொண்டிருக்க என்
ஆவல் வடித்துக் கொண்டிருக்கிறது
வாவல் துடித்துக் கொள்மனமோ என்
ஆவல் அடக்கிக் கொள்கிறேன்

நீவல் உணரத் தாங்காதே தேர்
நாவல் படிக்கத் தூண்டுகிறாய்
கூவல் விடுத்து ஏங்குதே ஓர்
ஏவல் அனுப்பி அமர்த்தினேன்

கேவல் முடித்து ஓய்கிறேன் என்
மேவல் துடைத்து சாய்கிறேன்
ஊரோ துயில் கொள்ளுதே என்
ஊனோ தவில் கொள்ளுதே

ஏனோ ஏனோ ஆட்கொள்கிறாய்
தானா தானா ஆள் கொள்கிறாய்

எழுதியவர் : யாழினி வளன் (26-Aug-17, 5:06 pm)
பார்வை : 1170

மேலே