கண்ணம்மா என் காதலி

கண்ணம்மா என் காதலியே..

கண்ணின் கருங்குழியில் எனைக் கட்டித் தள்ளிய கண்மணியே,

ஆழிப்பேரலையாய் எனை ஆட்கொண்ட அற்புதமே,

விந்தைப் பேரழகே உனை நாளும் நான் வந்தனை செய்திடுவேன்,

சிந்தனை யாவிலுமே நீ வந்தெனை வாட்டுகிறாய்

எனக்கோ காதலும் ஊட்டுகிறாய்

காதலை ஊட்டிவிட்டு என் கண்களை கீறிவிட்டாய்

கண்களைக் கீறிவிட்டு உனைக் காணவும் கூறுகின்றாய்

விளையாட்டுப் பிள்ளை நீதானோ.!!
உன் கையில் பொம்மையும் நான் தானோ..!!

உயிர்போகும் வேளையிலும் எனக்குன் முகம்
காணும்ஓர் உன்னத வரம் கிடைத்திடுமோ..!!

உனை நான் நித்தமும் வேண்டி நிற்பேன்..

எழுதியவர் : சிவக்குமார்-"கரிசல்மகன்" (28-Aug-17, 9:23 pm)
Tanglish : kannamma en kathali
பார்வை : 147

மேலே