மணம்

பூக்களைப் பறிக்காதீர் புத்தகம் ஏந்தும் தருவாயில்,
மொட்டுக்கள் மலரட்டும் முகாந்திரம் ஏதுமின்றி,
பிஞ்சுகள் பழுக்காட்டும் பிறகு பார்த்துக் கொள்ளுங்கள்,
கடமைகள் வேண்டாம் கனா காணும் தருவாயில்,
கைச்சிறை தேவையில்லை காலம் கழியும் வரை,
கனவுகளுக்கு மதிப்பளியுங்கள் மணவறை சேரும் முன்.
விளையாட்டு பொம்மையை விதவையாக்காதீர்,
வீண் விரயம் விலாசம் தேடி வரும்.

எழுதியவர் : கார்த்திகா பாண்டியன் (30-Aug-17, 1:48 am)
பார்வை : 72

மேலே