கவிதையாக
கவிதையாக ....
கவிதை by : பூ.சுப்ரமணியன்
தென்றல் காற்றிலே
மொட்ட மாடியில்
தலையணையை
அரியணையாக்கி
விண்மீன் கூட்டம்
ரசிக்கும்போது
கவிதை ஒளியாக
என்னிடம் சிரித்தது !
மலையில் நின்றுகொண்டே
கலை நோக்கோடு
நீர் வீழ்ச்சி ரசிக்கும்போது
கவிதை அருவியாக
என்னிடம் கொட்டியது !
மண்ணில் அமர்ந்துகொண்டே
மலர்க் கூட்டத்தின் நடுவே
மயங்கி நிற்கும்போது
கவிதை மலராக
என்னிடம் மலர்ந்தது !
வாசலில் நின்றுகொண்டே
வானவில்லை நோக்கியபோது
எண்ணங்கள் கவிதையாக
என்னிடம்
வண்ணங்களாக் பூத்தது !
பூ.சுப்ரமணியன்,
பள்ளிக்கரணை, சென்னை
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
