மரணம்தான் தீர்வா

வாழ்ந்து கொண்டிருக்கிறோம்...
தற்கொலை பேஷன் ஆகிவிட்ட காலத்தில்...

"கடன் தாங்கவில்லை", என விவசாயி மாண்டான்...
"மார்க் இல்ல", என மாணவன் மாண்டான்...
"வேல இல்ல", என பட்டதாரி மாண்டான் ...

"விளையாட்டு சொன்னது", என விடலை பயன் மாண்டான்...
காலக்கொடுமை...


செய்வன தெரியவில்லை ...

யோசித்துப் பார் மானிடா...

இறந்த ஒவ்வொரு உயிரிலும் ,
உந்தன் சமுதாய அலட்சியம் இருக்கும் ...
அதிகார வர்க்க அராஜகம் இருக்கும்...
பண முதலைகளின் தீராப்பசி இருக்கும்...

என்னால் முடிந்தது ...
இப்பதிவு

எழுதியவர் : திலக் பிரகாஷ் (2-Sep-17, 6:46 pm)
சேர்த்தது : திலக் பிரகாஷ்
பார்வை : 1538

மேலே