இந்திய கிராமங்கள்
காலணியை
கையில் அணிய
கட்டாய விதிமுறைகள்,
இழவு சொல்லும்போது
இரவலாக கிடைத்த
எச்சில் பதார்த்தங்கள்,.
பூசை பொங்கலுக்காய்
அம்மன் கோவில் முன்பு
அரை நிர்வாணமாய்
பூவரச இலைகளோடு
சில பூக்கள்,
ஆடு மேய்ந்ததற்கும்
கோழி விரட்டியதற்கும்
ஆலமரத்து
அறி(ரி)வாள் பஞ்சாயத்து
காய்ந்த மரங்களில்
கலர் கலராய்
கட்சி கொடிகள்,
இரட்டை குவளைகளோடு
தேநீர் கடைகள்,
இன்னும் இருக்கின்றன
இந்திய கிராமங்கள்,.....