என் தேசமே

நாடகங்கள் மேடை ஏற
நாட்டிய பாவைகள் வழி
தகுதிகள் மறந்திட, மறுத்திட
தடைகள் நிரம்பிட உருவாக்கிய
தண்ணீரும் கையேந்த - செந்நீர்
சிந்தியும் வேடிக்கை கண்கள் வட்டமிட
அழுக்குரல் ஓலங்கள் செவி அடைத்தும்
செவிடாய் போன செவிகள் பல
காதல் கீதங்கள் மட்டும் கேட்ட
காதல் பறவைகளையும் எழுப்பிய சத்தம்
போராட்டங்கள் கண்டு
போர்களமாய் மாறிய தேசம்
மனங்களில் மதத்தை திணிக்கும் மூடரே
கொடிகளில் கூட ஒற்றுமை இருக்கிறது
பச்சை தாங்கித்தான் விரிகிறது, பறக்கிறது
வெள்ளையும் காவியும் மறக்காதே!
பசுமை இருப்பின் படைக்கலாம்
தற்கொலை இல்லா விவசாயத்தை
பூக்கள் தூக்கும் பிஞ்சி விரல்
பாரம் சுமக்கும் அவலம்
நெஞ்சம் பொறுக்கவில்லை - பாரதியே
மீண்டும் வந்து விடு
உன் எழுத்தில் உதிக்கட்டும்
புதிய தேசம்....

-மூ.முத்துச்செல்வி

எழுதியவர் : மூ.முத்துச்செல்வி (7-Sep-17, 10:24 pm)
சேர்த்தது : மூமுத்துச்செல்வி
பார்வை : 946

மேலே