காதலும் கடந்து போகும்

காதலும் கடந்து போகும்.....

ஒற்றை மலருடன் காத்திருந்தேன்
உற்றக் காதலை மொழிந்துட
ஒற்றுப் பார்வை வீசிய காரிகை
பற்றுடன் வந்து பற்றிடுவாள் என......

சுற்றும் கடிமுள்ளோடு காலம் விரைந்தது
வெற்றாகி தனித்து சுற்றிடம் சூனியமானது
மலர் பற்றிய விரல்களில் ஆதங்கம் பரவி
அலர்மலர் சோர்ந்து இதழ்கள் உதிர்ந்தது

மறுதலித்த மங்கை மிதியடி உரசி
கருகிய இதழ்கள் ஆற்றாது அழுதது
இறுதியாய் கரங்களில் ஈரிலைக் காம்பு
உறுதியாய் வீசிக் கடந்தேன் காதலை!

கவிதாயினி அமுதா பொற்கொடி

எழுதியவர் : வை.அமுதா (9-Sep-17, 8:29 am)
பார்வை : 116

மேலே