பழுத்த இலைகளின் பனித்துளிக்கண்ணீர்

பழுத்த இலைகளில் பனித்துளிகள்கூட
விழித்த சூரியன்விழிக்கு
கருத்தே தெரிகிறது.
பிழைத்துகிடப்பதே
பெரிதெனவாழும்
எங்களின் இதயம்
விழித்த எங்கள் வாரிசை
நாடிமுடங்கி கிடக்கிறது.

பெயரன் பெயர்த்தி பெரிதென நினைத்து
அருகில் அமர்த்தி
கதை சொல்லி சிரித்து
பருகும் பானம்
பகிர்ந்து கொடுத்து
வருகின்ற எமனை
சிரிப்புடன் அழைத்து
உதிரும் காலம்
உறவுடன் அமர்ந்து
உயிரும் உடலும்
தளர்ந்த நிலையில்
நைநை எனபேசும்
உன்னால் தொல்லை
ஒதுங்கி படுத்தால்
நலமே என்று
வீட்டின் ஓரம்
கட்டிலில் படுக்கை
வேண்டா வெருப்பாய்
பிள்ளைகள் பேச்சு
போண்டாகூட திண்பதில்லை.
ஏண்டா உங்களுக்கு
எங்கள்மீது.வெறுப்பு.
விழுதுகளாய் நாங்கள்
இருந்ததினால் தான்
ஆலமரமாய் நீங்கள்
வளர முடிந்தது.
வயதான நாங்கள்
விழுதுகள்தான்
என்றும் உங்களை வாழ்த்திடுவோம்.

எழுதியவர் : இராமஜோதி. சு (14-Sep-17, 4:57 pm)
சேர்த்தது : ராமஜோதி சு
பார்வை : 97

மேலே